மிசோரத்தில் முழுஅடைப்பு - லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11க்கு ஒத்திவைப்பு
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் ஏப்ரல் 7 புதன்கிழமை நடைபெறவிருந்த லோக்சபா தேர்தல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
மிசோ அமைப்புகளின் போராட்டம், முழு அடைப்பு அறிவிப்பு ஆகியவை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் புதன்கிழமையன்று அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும், மிசோரம், நாகலாந்து, மணிப்பூரில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் "புரு" பழங்குடியினர் திரிபுராவின் நிவாரண முகாம்களில் இருந்து தபால் மூலமாக வாக்களிக்க எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை தன்னார்வ அமைப்புகள் முழு அடைப்பு போரட்டம் நடத்த உள்ளனர்.
இதனையடுத்து மிசோரமில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 11 ஆம் தேதி வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications