வட கிழக்கின் கடைசி மாநிலத்தையும் இழந்த காங்.. 10 ஆண்டு கால மிசோரம் ஆட்சி பறிபோனது!
அய்ஸ்வால்: மிசோரத்தில் 10 ஆண்டுகளாக அரியணையில் இருந்த காங்கிரஸ், ஆட்சியை இழந்துள்ளது. மிசோரம் தேசிய முன்னணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது.
மிசோரம், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பாஜகவுக்கு ஒரு இடம்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் மிசோ தேசிய முன்னணிக் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எம்.என்.எப் கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

பெரும்பான்மை பெற்றது
மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மிசோ தேசிய முன்னணி கூட்டணிக்கு 26 இடங்கள் கிடைத்துள்ளதால் அது ஆட்சியமைக்கிறது.

2 தொகுதியிலும் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. மிசோரம் முதல்வர் லால் தன்வாலா காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரும் எனக் கூறியிருந்தார். அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் தோல்வியுற்றார்.

3வது முறை வந்ததில்லை
மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, சில முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, எம்.என்.எப் கட்சி மற்றும் பாஜகவில் இணைந்தனர். அதனால் தான் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் கட்சி என கூறப்படுகிறது.

காங்கிரஸின் பரிதாபம்
மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை, இதுவரை எந்த கட்சியும் 3வது முறையாக ஆட்சிக்குத் திரும்ப வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வட கிழக்கில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தற்போது அதையும் இழந்து விட்டது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications