“என் செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்”... பிரஸ் மீட் வைத்து, போலீசில் புகார் அளித்த எம்.எல்.ஏ!
குவாலியர்: எம்.எல்.ஏ. ஒருவர் காணாமல் போன தனது செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தருமாறு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கேட்டுக் கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேச த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச அமைச்சர் அஸம்கான் காணாமல் போன தனது எருமை மாடுகளை சுமார் ஒன்றரை ஆண்டுகால தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் கண்டு பிடித்தனர். இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன தனது நாயைத் தேடித் தரும் படி பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார், அம்மாநிலத்தில் உள்ள டபரா சட்டசபைத் மன்ற தொகுதி எம்.எல்.ஏ. இம்ரதி தேவி. இவரது லெப்ரடர் நாய் சமீபத்தில் காணாமல் போய் விட்டது.
அதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய இம்ரிதி தேவி, தனது செல்ல நாயைக் கண்டுபிடித்து தரும் படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக போலீசிலும் அவர் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ புகாரின் பேரில் நாயை தேடிவருதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் ஒவ்வொருவருக்கும் எம்.எல்.ஏவின் செல்ல நாயின் புகைப்படம் கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications