'பீகாரில் சிறுமியின் ஆடையை அவிழ்த்து பாலியல் தொல்லை செய்த சிறை சூப்பிரண்டன்ட்'
பாட்னா: பீகாரில் சிறை சூப்பிரண்டன்ட் சிறுமி ஒருவரின் ஆடையை அவிழ்த்துவிட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்ட சிறையின் சூப்பிரண்டன்டாக இருப்பவர் க்ரிபா சங்கர் பாண்டே. அவர் சிறுமி ஒருவரின் ஆடையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணை அறிக்கை வரும் முன்பே பாண்டேவை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது ஜாவித் பாண்டேவின் லீலைகள் அடங்கிய புகைப்படங்களை நிதிஷ் குமாரிடம் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீசாரும் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications