கேரளாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் அடித்துக் கொலை: பதற வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கமைச் சேர்ந்தவர் ஷபீர்(23). கடந்த சனிக்கிழமை அவர் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது 3 வாலிபர்கள் அவரது பைக்கை வழிமறித்தனர்.

அந்த 3 பேரும் கட்டை மற்றும் கிரிக்கெட் பேட்டால் ஷபீரை ஈவு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்தனர். ஷபீரின் கால்களில் பேட்டால் அடி அடி என்று அடித்தனர். மேலும் ஷபீருடன் வந்த நபரையும் அவர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.

பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து வைக்கம் இன்ஸ்பெக்டர் கூறுகையில்,

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கும் என்று சந்தேகிக்கிறோம். ஷபீர் மற்றும் அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனை எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

ஒருவர் ஷபீரின் காலை பிடித்துக் கொள்ள மற்றொருவர் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+