4 வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்குகிறது 'சூரிய கிரண்' விமானப்படை சாகச குழு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சூர்ய கிரண் ஏரோபாடிக் பிரிவினர், இவ்வாண்டு, விமான படை தினத்தில் தங்கள் சாகசங்களை செய்து காட்ட உள்ளனர்.

இந்திய விமானப்படையின் பிரிவான சூரியன் கிரன் சாகச குழுவின் சாகசங்கள், இந்திய விமானப்படை நிகழ்ச்சியின்போது, கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. போதிய விமானங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்நிலையில், 4 வருடங்கள் கழித்து தற்போது, அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் விமானப்படை தினத்தில் இந்த சாகச குழு சாகசம் நடைபெற உள்ளது.

அதேநேரம் அதிக நேரம், இந்த குழுவிற்கு ஒதுக்கப்படாது என்று தெரிகிறது. இந்த குழுவின் புகைப்படங்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications