வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா- ராஜ்யசபாவில் இன்று தாக்கல்!!
டெல்லி: வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பான மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா அரசியல் சட்டத்திருத்த மசோதா என்பதால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மேலும் தொடர்புடைய மாநில சட்டசபைகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த மசோதா 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அப்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அப்போது லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இம்மசோதாவில் அஸ்ஸாமின் சில பகுதிகளையும் சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனால் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட இம்மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்த மசோதா குறித்தும் மசோதா வரம்பிற்குள் அஸ்ஸாமின் சில பகுதிகளை கொண்டு வருவது தொடர்பாகவும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா தலைவர்களுடன் விவாதித்தனர்.
பா.ஜ.க, தலைவர் அமித்ஷாவின் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மசோதாவின் வரம்பிற்குள் மேற்குவங்கம், திரிபுரா மற்றும் மேகாலாயாவின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதைப் போல அஸ்ஸாமின் சில பகுதிகளையும் சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து நில எல்லை வரம்பு ஒப்பந்தம் தொடர்பான மசோதாவுக்கு நேற்று காலை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதது. இந்த மசோதா நிறைவேறினால் நம் நாட்டிலிருக்கும், அதேநேரத்தில் வங்க தேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் இந்தியாவிடமும், வங்கதேச பகுதியில் நம் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் அந்நாட்டிடமும் ஒப்படைக்கப்படும். இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications