சட்டசபை தேர்தல்கள்: ஹரியானா, மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பிரசாரம்!
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 15ந் தேதி நடக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டு கட்சிகளும் பிரசாரத்தை துவக்கி விட்டன. பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும பாஜக தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிடடோர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வரும் 4-ந் தேதி ஹரியான மாநிலம் கர்னாலில் பிரசாரத்தை தொடங்கும் அவர் மகாராஷ்டிராவில் கோலாப்பூர், பீட் மற்றும் மும்பையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications