கர்நாடகாவில் 10 நாட்கள் தீயாக பிரச்சாரம் செய்யும் மோடி
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மோடி 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளாராம்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவை கைப்பற்றிவிடத் துடிக்கிறது பாஜக.
இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதால் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வர மாட்டார் என்று காங்கிரஸ் தெரிவித்தது. இந்நிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார் மோடி.
ஏப்ரல் 29ம் தேதி முதல் சுமார் 10 நாட்கள் வாக்கு சேகரிக்க உள்ளார் மோடி. அவர் சிக்கோடி, ரெய்ச்சூர், பெங்களூரு, விஜயபுரா ஆகிய இடங்களில் நடக்கும் பேரணிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் 16 பேரணிகளில் கலந்து கொள்கிறார்.
மோடி கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய வேண்டு என்று பாஜக வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்களாம். இந்த தேர்தலில் அதிமுக வெறும் இரண்டு இடங்களில் தான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.