காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்!
ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா சவால் விட்டுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 35A மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு சட்டப் பிரிவுகள் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருப்பதாகவும் பாஜக கூறியிருந்தது.

இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோர் அப்போதே கண்டனம் தெரிவித்தனர். இது இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் உள்ள உறவை துண்டிக்கும் செயலாக இருக்கும் என்றும், இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், பாஜகவும் சரிசமமான வெற்றியை பதிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.
இந்த சூழலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகளை பாஜக அரசு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில்," லோக்சபா தேர்தலில் மோடி எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், காஷ்மீருக்கான 35A மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளை மட்டும் நீக்க முடியாது," என்று கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்த கேள்விக்கு,"காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications