ராஜ்தானி விரைவு ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திப்ரூகர் ராஜ்தானி விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் விபத்தை அடுத்து அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Modi Condoles Train Accident Deaths

டெல்லி-திப்ரூகர் ராஜ்தானி விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசும், ரயில்வே அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பீகார் மாநில அரசு

பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி, ரயில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கும் ரூ.50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+