நடைமுறை சாத்தியமற்ற குடியரசுத் தலைவர் உரை: வீரப்ப மொய்லி கருத்து
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் நடைமுறை சாத்தியமற்றவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார். இந்த உரையில் மோடி தலைமையிலான புதிய அரசு செயல்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி மோடி அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் உரையில் சொல்லாட்சி மட்டும் தான் உள்ளது. அது எப்படி இது எல்லாம் சாத்தியபடும்? வெறும் அரசியல் பிரச்சாரத்திற்க்காக மட்டும் இது போன்ற உரைகள் பயன்படலாம்.. நடைமுறையில் இது சாத்தியபடாது.
பூனே மற்றும் குர்ரம் போன்ற இடங்களில் நடந்த வகுப்பு கலவரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் இடம் தராதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.












Click it and Unblock the Notifications