உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது - ’மான் கீ பாத்’ உரையில் மோடி பெருமிதம்
உலக அமைதியில் இந்தியாவின் பங்கு குறித்து பிரதமர் மோடி மான் கீ பாத் உரையில் குறிப்பிட்டார்.
டெல்லி: உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது என மான் கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் மக்களிடையே ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நண்பகலில் 'மான் கீ பாத்' உரை ஆற்றினார்.

பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரை:
இந்தியா எப்போதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்குமே ஆசைப்படுகிறது. இந்தியாவின் இராணுவப் படைகளுக்கும் கூட இதைத்தான் விரும்புகின்றன. இதுவரை 7000க்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் சபையோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
உலகிலேயே ஐ.நா.,வில் அதிக அதிகாரிகள் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை இந்திய இராணுவத்தினர் 85க்கும் அதிகமான நாட்டு இராணுவ வீரர்களுக்கு அமைதிப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்து இருக்கிறார்கள்.
அதோடு பல நாடுகளுக்கு நாம் மருத்துவ உதவியும் அளித்து இருக்கிறோம். இந்தியா எப்போதும் உலக அமைதிக்கான தூதுவராக இருந்து வருகிறது.
50க்கும் அதிகமான ஐ.நா.,வின் அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நமது நாட்டு இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும் பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications