உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது - ’மான் கீ பாத்’ உரையில் மோடி பெருமிதம்
உலக அமைதியில் இந்தியாவின் பங்கு குறித்து பிரதமர் மோடி மான் கீ பாத் உரையில் குறிப்பிட்டார்.
டெல்லி: உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது என மான் கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் மக்களிடையே ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நண்பகலில் 'மான் கீ பாத்' உரை ஆற்றினார்.
பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரை:
இந்தியா எப்போதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்குமே ஆசைப்படுகிறது. இந்தியாவின் இராணுவப் படைகளுக்கும் கூட இதைத்தான் விரும்புகின்றன. இதுவரை 7000க்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் சபையோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
உலகிலேயே ஐ.நா.,வில் அதிக அதிகாரிகள் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை இந்திய இராணுவத்தினர் 85க்கும் அதிகமான நாட்டு இராணுவ வீரர்களுக்கு அமைதிப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்து இருக்கிறார்கள்.
அதோடு பல நாடுகளுக்கு நாம் மருத்துவ உதவியும் அளித்து இருக்கிறோம். இந்தியா எப்போதும் உலக அமைதிக்கான தூதுவராக இருந்து வருகிறது.
50க்கும் அதிகமான ஐ.நா.,வின் அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நமது நாட்டு இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும் பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.