ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகரில் இப்தார் விருந்து அளிக்கிறார் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகரில் வைத்து இப்தார் விருந்து அளி்க்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகர் வருகிறார் பிரதமர் மோடி. இதுதொடர்பான திட்டம் தற்போது இறுதி நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் சரி என்று கூறியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தற்போது மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவில் எட்டு நாள் பயணமாக இந்தியாவை விட்டுக் கிளம்பிப் போயுள்ளார் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்ஜானுக்கு முன்பு கடைசி வெள்ளிக்கிழமை ஜூலை 17ம் தேதிதான். எனவே அன்றைக்குள் இப்தார் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மோடி, ஜூலை 17ம் தேதி காலை ஜம்மு செல்கிறார். அங்கு கிரிதாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அவர் ஸ்ரீநகர் சென்று இப்தார் விருந்தில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
மோடி பிரதமரான பின்னர் பலமுறை ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தீபாவளிக்கு ஸ்ரீநகர் போயிருந்தார்.












Click it and Unblock the Notifications