முப்தி முகமது சையது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
டெல்லி: மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது உடல் நிலக்குறைவால் இன்று மரணமடைந்தார், அவருக்கு வயது 79. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டிசம்பர் 24ம் தேதி சேர்க்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் முப்தி முகமது சயீது.
In Video: PM @narendramodi pays homage to Shri #MuftiMohammadSayeed pic.twitter.com/Jsnw7hVWSV
— PIB India (@PIB_India) January 7, 2016 இந்நிலையில் அவரது உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில், இன்று காலை முப்தி முகமது சயீது மரணமடைந்தார்.
இதையடுத்து டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலமாக, அவரது உடல் காஷ்மீருக்கு இன்று மதியம் எடுத்துச் செல்லப்பட்டது. விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, முப்தி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இறுதி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications