3 ஆண்டுகள்... 62 நாடுகள்… சுற்றிப்பார்த்து சாதனை படைத்த பிரதமர் மோடி
பிரதமராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 62 நாடுகளை சுற்றிப் பார்த்து சாதனை படைத்துள்ளார் பிரதமர் மோடி.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாண்டுகளில், 62 வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றது முதலே, தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தாலும் அதை அவர் கண்டுகொள்வதில்லை.

சர்வதேச அளவில், இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தும் வகையில், அவர் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக, ஆளும், பா.ஜ.க, கூறி வருகிறது. ரஷ்யா, ஸ்பெயின் உட்பட நான்கு நாடுகளுக்கு, சில நாடகக்குழு முன்னர் , அவர் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
நாடு திரும்பிய உடன், உடனடியாக, கஜகஸ்தானில் நடைபெற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். இது, மூன்றாண்டுகளில் அவரது, 62 வெளிநாட்டு பயணமாகும்.
மூன்றாண்டுகளில், அமெரிக்காவிற்கு, நான்கு முறையும், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிற்கு, மூன்று முறையும். சீனா, ஜப்பான், ஜெர்மனி நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் சென்று வந்துள்ளார்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ' அண்டார்டிகாவை தவிர, அனைத்து கண்டங்களுக்கும் சென்று வந்துள்ளார் மோடி . குறிப்பாக, வலிமை படைத்த நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் அதிக அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 'சார்க்' எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளில் அதிக முறைகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications