கண்டோன்மென்ட் தேர்தல்: மோடி வென்ற வாரணாசியில் 7 இடங்களிலும் பா.ஜ.க. படுதோல்வி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வென்ற வாரணாசியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் 7 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றவர் பிரதமர் மோடி. இந்த வாரணாசியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தல் நேற்று நடைபெற்றது.

மொத்தம் உள்ள 7 இடங்களுக்கு மொத்தம் 36 பேர் போட்டியிட்டனர். 15 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் பாரதிய ஜனதாவும் போட்டியிட்டது.
ஆனால் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பெரும்பாலும் சுயேட்சைகளே வென்றுள்ளனர்.
இதேபோல் லக்னோ கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் அனைத்து 8 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. இது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வென்ற தொகுதியாகும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எம்.பி.யாக இருக்கும் இடங்களில் கூட கண்டோமென்ட் போர்டு தேர்தலில் வெல்ல முடியாமல் போனது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பினண்டைவாகும்.












Click it and Unblock the Notifications