For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒய்எஸ்ஆர் காங் விரித்த வலையில் நீங்கள் விழுந்து விட்டீர்கள்...இதை அப்பவே நாயுடுவிடம் சொன்னேன்- மோடி

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Modi says that TDP falls into YSRCPs trap

தெலுங்கு எங்கள் தாய் போன்றது. ஆந்திரா, தெலுங்கானா இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சிறப்பு அந்தஸ்து மூலமாக ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது

ஆந்திரா-தெலுங்கானா பிரிவின் நன்மையை விரைவில் நீங்கள் அறிவீர்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே உள்ள உள்கட்சி மோதல் காரணமாக தெலுங்கு தேசம் எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியபோதே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விரித்த வலையில் நீங்கள் விழுகிறீர்கள் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தேன் என்றார் மோடி.

English summary
When TDP was leaving NDA, I called up Chandrababu Naidu, warned him that you are falling into YSR Congress's trap: PM Modi in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X