முதல் 'மேட்சிலேயே' முச்சதம் போட்டுட்டாரே மோடி.. 'சபாஷ்' போடும் அத்வானி!!
டெல்லி: பிரதமர் மோடியை பேட்ஸ் மேனாக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் எனப் புகழ்ந்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, மேலும் அவர் தனது முதல் ஆட்டத்திலேயே மூன்று செஞ்சுரிகளைப் போட்டுள்ளதாக லோக்சபா தேர்தல் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.
டெல்லியை அடுத்துள்ள சூரஜ்குந்த் நகரில், பாஜக சார்பில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள புதிய எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் நடந்தது. இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘எம்.பி.க்கள் பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிக்கவேண்டும் என்றும், எம்.பி.க்கள் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை பொது இடங்களில் பேசக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்தத் தலைவர் அத்வானி, ‘பாஜக எம்.பிக்கள் சர்ச்சைக்குரிய விசயங்களில் எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்' என அறிவுரை வழங்கினார்.
மேலும், அத்வானி தனது பேச்சினூடே பிரதமர் மோடியை கிரிக்கெட் கேப்டனுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, ‘பேட்ஸ் மேனாக இருந்து கேப்டன் ஆன மோடி முதல் டெஸ்ட் போட்டியிலேயே 3 செஞ்சுரி அடித்து சாதனை படைத்துள்ளார்' என நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியதை மறைமுகமாகப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications