சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசி மூலம் வாழ்த்திய மோடி!
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டத்தை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கெக்யாங் ஆகியோர் மார்ச் மாதம் பதவி ஏற்பர். ஜி ஜின்பிங் அதிபராவது மட்டுமில்லாமல் கட்சி தலைமை, ராணுவ தலைமை ஆகிய பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார்.
இதையடுத்து பிரதமர் மோடி நேற்று ஜி ஜின்பிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா மற்றும் சீனாவின் உறவு இனி வரும் காலங்களில் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சீனாவின் சமூக வலைத்தளமான ''வெய்பூ'' மூலம் ஜி ஜின்பிங்கிற்கு மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். மோடிக்கு அதிபர் ஜி ஜின்பிங் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் விரைவில் சந்திக்க போவதாக இந்த தொலைபேசி உரையாடல் மூலம் தெரியவந்து இருக்கிறது. சீன அதிபர் முதல்முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் தொலைபேசி மூலம் பேசியது இதுவே முதல்முறையாகும்.