ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டும் செயல்படுகிறார் பிரதமர் மோடி: ராகுல் சாடல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது இன்று ராகுல் காந்தி பேசியதாவது:
அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்த போது தன்னுடைய பெயரை பொறித்த வெளிநாட்டு சூட் அணிந்திருந்தார் பிரதமர் மோடி. அதன் விலை ரூ10 லட்சம்.. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேக் இன் இந்தியா பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. ஆனால் பணவீக்க விகிதம் மட்டும் குறையவே இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து போனால் அதன் பலன் எங்கே போனது??
பிரதமர் மோடிக்கு நான்கு ஐந்து தொழிலதிபர் நண்பர்கள் இருக்கின்றனர். நீங்கள் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கும்போது பலனடைகிறவர்கள் அந்த தொழிலதிபர்களே.
இவ்வாறு ராகுல் பேசினார்.












Click it and Unblock the Notifications