இரட்டை இலை யாருக்கு? வாதங்கள் நிறைவு.. எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் 'ரிசல்ட்'
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா, ஓபிஎஸ் அணி வாதங்கள் நிறைவடைந்துவிட்டன. தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் முடிவை அறிவிக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து சசி மற்றும் ஓபிஎஸ் அணி வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று முன்வைத்தனர். இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் முடிவை அறிவிக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்த பஞ்சாயத்து இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. சசிகலா அணி சார்பாக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், அரிமா சுந்தரம், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

ஓபிஎஸ் அணி சார்பாக சி.எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி மற்று மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதிட்டனர். இரு அணியினரும் சுமார் 4 மணிநேரம் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இருதரப்பும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திததனர். ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் கூறுகையில், தங்களது தரப்பில் ஆணித்தரமாக ஆழமாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன; எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என வாதிட்டார்.

அதேபோல் சசிகலா அணியின் அரிமா சுந்தரம் கூறுகையில், எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். நாளை காலையில் முடிவு தெரியவரும் எனக் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications