"ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி- திடுக் தகவல்
பெங்களூர்: நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள சான்றான ஆதார் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ நிதி உதவி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை "MongoDB" என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
ஆனால் "MongoDB" நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணிசமான நிதி உதவி வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. இந்த MongoDB நிறுவனம் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் முதலீட்டாளர்களில் ஒருவராக MongoDB நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருப்பது In-Q-Tel என்ற நிறுவனத்தை. இந்த In-Q-Tel நிறுவனத்துக்கு நேரடியாக சிஐஏ அமைப்பு நிதி உதவி அளிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆதார் நிர்வாகிகளோ, MongoDB நிறுவனமோ.முன்வரவில்லை. ஆதார் அடையாள அட்டைக்கான தலைமை நிர்வாகியான நந்தன் நிலகேனியும் மெளனம் சாதித்தே வருகிறார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications