அந்தமானில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். ஆண்டு தோறும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே மாதம் 17ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அது 3 நாட்களுக்கு முன்னதாக இன்றே தொடங்கியுள்ளது.

Monsoon hits Andaman & Nicobar Islands

தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு பருவமழை முன்னேறியது. இன்று முதல் 2 நாளுக்கு அந்தமான், நிகோபாரில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நிகோபார் தீவுக் கடலுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது. அந்தமான் தீவு கடலுக்கு மே 15 முதல் 17 வரை மீன் பிடிக்க செல்லக் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் மழை பெய்ய துவங்கி 2 வாரங்களுக்குள் கேரளா பருவ மழையை சந்திக்கும். எனவே இந்த மாதம் 28 அல்லது 29 தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழியத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+