அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
டெல்லி: அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மகாராஷ்டிரா பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாராஷ்டிராவின் தானே, மும்பை, அகமதுநகர், பார்பானி, பிரம்மபுரி, ராஜ்நந்கோன், பவானிபட்னா, பூரி, அகர்த்தலா, லும்டிங் மற்றும் வடக்கு லக்ஷிம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர கர்நாடகாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மற்றும் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை, விதர்ப்பா, சத்தீஸ்கர், ஒடிசா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும், வங்கதேசத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடகா, தெற்கு கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய கனத்த மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு உத்தர பிரதேசம், பீகா மற்றும் ஜார்கண்டில் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு