நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்: இந்தியாவுக்கான தூதர் தீப் உபாத
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று இந்தியாவுக்கு அந்நாட்டுத் தூதர் தீப் உபாத்யாயா அச்சம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இன்று முற்பகல் ரிக்டரில் 7.9 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து தரைமட்டமாகின.

தலைநகர் காத்மண்டுவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தரகரா டவர் என்ற 9 மாடி கட்டிடம் தரைமட்டமானது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீபா உபாத்யாயா, நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications