பிரீடம் 251... ரூ. 3600 கொடுத்து வாங்கி 251க்கு விற்பதா?... ஆட்காம் போடும் புது குண்டு!
டெல்லி: உலகிலேயே மிகவும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன் என்ற பெயரில் அறிமுகமான பிரீடம் 251 போனுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. தங்களுடைய போனை ரூ. 3600 கொடுத்து வாங்கி, அதனை ரூ. 251க்கு விற்பதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது ஆட்காம் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த மாதம், உலகிலேயே மிகக் குறைவான விலைக்கு, அதாவது ரூ. 251க்கு ஸ்மார்ட்போன் விற்கப் போவதாக அறிவித்தது.
இது தொடர்பாக தனியே இணையதளம் ஒன்றையும் அந்நிறுவனம் தொடங்கியது.

அலைபாய்ந்த மக்கள்...
மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் என்பதால், அதனை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஒரே நேரத்தில் அதிகமானோர் முன்பதிவு செய்ததால், அந்த இணையதளமே முடங்கியது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள்...
ஆனால் முன்பதிவு செய்தவர்களுக்கு 4 மாதங்களுக்குப் பின்னரே பிரீடம் 251 வழங்க முடியும் என ரிங்கிங் பெல்ஸ் அறிவித்தது. அதோடு, செல்போனை கையில் வாங்கும்போது பணம் செலுத்தினால் போதுமானது என முன்பதிவு செய்தவர்களின் பணத்தைத் திருப்பித் தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஏமாற்று வேலை...
இது ஒருபுறம் இருக்க, இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் விற்பது சாத்தியமல்ல, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் சர்ச்சைகள் வெடித்தன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீதும் பல சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டன.

கண்காணிப்பு...
அதன் தொடர்ச்சியாக அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை போன்றவை, இந்த நிறுவனத்தை கண்காணிப்பதாக அறிவித்துள்ளன.

ஆட்காமின் புகார்...
இந்நிலையில், பிரீடம் 251 போன், தங்களது குறிப்பிட்ட மாடலைப் போல் இருப்பதாக ஆட்காம் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

எங்களது போன் மாடல்...
இதுதொடர்பாக, ஆட்காம் என்றழைக்கப்படும், 'அட்வான்டேஜ் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சஞ்சீவ் பாட்டியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பதை போல, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கும் எங்களது மொபைலை 3,600 ரூபாய் விலையில் விற்பனை செய்துள்ளோம்.

சட்டப்படி நடவடிக்கை...
ஆனால், எங்களுடைய மொபைலை, 251 ரூபாய் மொபைல் என அந்நிறுவனம் விற்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்தால், அந்நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை...
மேலும், எங்களுடைய மொபைல் போல, அவர்களுடைய மொபைலை வடிவமைத்தாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications