மும்பை வந்தார் இஸ்ரேல் சிறுவன் மோஷே.. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பெற்றோரை பறி கொடுத்தவர்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் தனது பெற்றோரைப் பறி கொடுத்த சிறுவன் மோஷே மும்பை வந்துள்ளார். 2009ம் ஆண்டு இஸ்ரேலுக்கு இடம் பெயர்ந்த பின்னர் முதல் முறையாக மும்பை வந்துள்ளார்.

கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் மோஷேவின் பெற்றோர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் - ரிவிகா பலியாயினர். மொத்தமாக 166 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். பெற்றோரைப் பறி கொடுத்தபோது மோஷேவுக்கு 2 வயது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்ற மோடி மோஷேவைச் சந்தித்தார். அப்போது பிரதமரிடம் பேசிய மோஷே, மும்பை வர விரும்புவதாக கூறியிருந்தார் மோஷே. இந்த நிலையில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட நரிமன் இல்ல வீட்டைப் பார்வையிட்டு பெற்றோருக்கு அஞ்சலி செலுத்து வந்துள்ளார் மோஷே.












Click it and Unblock the Notifications