உ.பி.யில் 4 குழந்தைகளுடன் தாயும் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் குரவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன் கரேரா (35). இந்த பெண்மணிக்கு ஆசாத் (11), வன்ஷிகா (9), பன்சு (6), அவதேஷ் (4) ஆகிய 4 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், சுமன் தன்னுடைய 4 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் வந்து பார்த்தபோது அங்கு தாயும், குழந்தைகளும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பெண்ணின் கணவரிடமும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications