இப்ப முட்டை சாப்பிட்டால்.. பிற்காலத்தில் நர மாமிசம் சாப்பிடுவாங்க.. பாஜக தலைவர் பரபர பேச்சு
முட்டை சாப்பிடுவது குறித்து பாஜக தலைவர் சர்ச்சை கருத்து கூறியுள்ளார்
போபால்: மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, சிக்கன் போய் முட்டை வரை வந்துவிட்டது விவகாரம்.. "குழந்தைங்க, இப்போ முட்டை சாப்பிட்டால், பிற்காலத்தில் நர மாமிசம் சாப்பிடுவாங்க" என்று பாஜக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நம்ம ஊரில் உள்ளது போலவே, மத்திய பிரதேச மாநிலத்திலும் அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநில ஆளும் கட்சி எடுத்த முடிவு.
ஆனால், இதற்கு எதிர்ப்பு பாஜக தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவரான கோபால் பார்க்கவா இதை பற்றி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "குழந்தைகள் முட்டை, மாமிசம் சாப்பிடுவது பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக அவர்களை மாற்றும். இந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள அரசாங்கத்திடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
#WATCH Madhya Pradesh (MP) BJP leader Gopal Bhargava on MP government's proposal to distribute eggs at Anganwadis says, "Bharat ke jo sanskar hain, sanatan sanskriti mein mansahaar nished hai. Agar bachpan se hi hum ise khaayenge toh bade ho kar nar bhakshi na ho jaayen." (30.10) pic.twitter.com/s9INELUsYw
— ANI (@ANI) October 31, 2019
ஏன், குழந்தைகளை முட்டைகளையும், இறைச்சியையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தறீங்க? இந்திய கலாசாரம் எப்போதும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை எப்பவுமே அனுமதித்தது இல்லை.
இப்பவே, குழந்தைகளாக இருக்கும்போதே அவங்க முட்டைகளையும் இறைச்சிகளையும் சாப்பிட்டால், பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவார்கள்" என்றார். முட்டை சாப்பிடக்கூடாது என்ற அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.