47 பேரை காவு வாங்கிய "வியாபம்" ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு ம.பி. முதல்வர் சவுகான் பரிந்துரை!
போபால்: நாட்டை உலுக்கிவரும் 47 பேரை மர்மமான முறையில் பலி கொண்ட 'வியாபம்' அரசு தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பரிந்துரைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் சிலர், லஞ்சம் கொடுத்து எளிதாக வேலைவாய்ப்பை பெற்று சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி அரசியல் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 47 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். மேலும் வியாபம் முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வரான பாரதிய ஜனதாவின் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
இதனிடையே வியாபம் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியிருந்தார். அதை மாநில அரசு நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து வியாபம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் வியாபம் முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை தேவை என கருதினால் மத்திய பிரதேச அரசு அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரி திக்விஜய்சிங் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றது. இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது.
இச்செய்தி வெளியான உடனேயே மத்திய பிரதேச முதல்வர் சவுகான், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில உயர்நீதிமன்றம் பரிந்துரைக்க கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications