47 பேரை காவு வாங்கிய "வியாபம்" ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு ம.பி. முதல்வர் சவுகான் பரிந்துரை!
போபால்: நாட்டை உலுக்கிவரும் 47 பேரை மர்மமான முறையில் பலி கொண்ட 'வியாபம்' அரசு தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பரிந்துரைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் சிலர், லஞ்சம் கொடுத்து எளிதாக வேலைவாய்ப்பை பெற்று சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி அரசியல் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 47 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். மேலும் வியாபம் முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வரான பாரதிய ஜனதாவின் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
இதனிடையே வியாபம் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியிருந்தார். அதை மாநில அரசு நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து வியாபம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் வியாபம் முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை தேவை என கருதினால் மத்திய பிரதேச அரசு அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரி திக்விஜய்சிங் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றது. இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது.
இச்செய்தி வெளியான உடனேயே மத்திய பிரதேச முதல்வர் சவுகான், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில உயர்நீதிமன்றம் பரிந்துரைக்க கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications