நாடாளுமன்றத்தில் 5ம் நம்பர் அலுவலக அறை யாருக்கு? தெலுங்கு தேசம்-திரினமுல் எம்.பிக்கள் கை கலப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட அறைக்காக திரினமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு கட்சியினருக்கும் அலுவலகம் ஒதுக்கப்படும். இங்குதான் அந்தந்த கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் செய்து கொள்ளுவார்கள்.
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சிக்கு 5வது எண் அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறையை திரினமுல் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியினருக்கு 3வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு தேசம் கட்சியினர் தங்கள் அலுவலகத்தை காலி செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த திரினமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 5ம் எண் அறைக்குள் வலுக்கட்டாயமாக புகுந்து கொண்டதுடன், அறைக்கு வெளியே மாட்டியிருந்த தெலுங்கு தேசம் கட்சி பெயர் பலகையையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான கைகலப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியினர் தங்களது பெயர் பலகையை மீண்டும் எடுத்து மாட்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் அலுவலக அறையை காலி செய்யவில்லை என்றால் அதுகுறித்து சபாநாயகர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதைவிடுத்து தகராறு செய்தது திரினமுல் காங்கிரசாரின் தவறு என்கின்றனர் நாடாளுமன்றவாதிகள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications