வேலையை முடித்தால்தான் ரிப்பன் வெட்டுவாங்கன்னு தெரியாதா மோடி.. ஷீலா பதிலடி
டெல்லி: நான் வெறுமனே ரிப்பன் மட்டுமே கட் பண்ணுகிறேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வேலையெல்லாம் முடிந்த பிறகுதான் ரிப்பன் வெட்டுவார்கள் என்று கூடவா மோடிக்குத் தெரியாது என்று பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, ஷீலாவை ஒரு வேலையும் செய்வதில்லை. வெறுமனே ரிப்பனை மட்டும் கட் செய்கிறார் என்று சாடியிருந்தார்.
இதற்கு சரியான பதிலடி பதிலை அளித்துள்ளார் ஷீலா. இதுகுறித்து அவர் கூறியதாவது...
வேலை முடிந்தால்தான்
வேலையை நிறைவு செய்த பின்னர்தான் அதை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இது கூடவா மோடிக்குத் தெரியாது...
அடிப்படை கூட தெரியலையே..
ஒரு நிர்வாக செயல்பாடு குறித்த அடிப்படை கூட மோடிக்குத் தெரியவில்லையே..இது ஆச்சரியமாக இருக்கிறது.
கரண்ட் ஒரு பிரச்சினையா...
டெல்லியில் மின்சாரமே இல்லை என்று கூறுகிறார் மோடி. நான்அவரிடம் கேட்கிறேன், கொல்கத்தா, மும்பை மற்றும் சில நகரங்களைத் தவிர இந்தியாவின் வேறு எந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகமாகிறது.
ஜெனரேட்டரை கிண்டலடிப்பதா
பிரதமரின் இல்லத்தில் ஜெனரேட்டர் இருப்பதைக் கூட கிண்டலடிக்கிறார். அது பாதுகாப்பு காரணங்களுக்காகவே வைக்கப்பட்டுள்ளது என்றார் ஷீலா.