சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு பன்றிக் காய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
75 வயதான முலாயம் சிங் யாதவுக்கு மூச்சு விடுவதில் சிரம் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை உட்பட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் அவருக்கு உள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே குர்கான் மேதாந்தா மருத்துவமனையில்தான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய கோளாறு காரணமாக ராஜ்நாத்சிங் சிகிச்சைக்காக இம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications