முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளாவில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நாளை அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. அத்துடன் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து கேரள சட்டசபையை கூட்டி பற்றி விவாதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் கடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications