முல்லைப் பெரியாறு: அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட செல்லும் அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கி வைப்பது தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாகவும் எனவே அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளா மனு தள்ளுபடி
கேரள மாநில அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளா தாக்குதல்
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஆனால் கேரள போலீசார் தமிழக அதிகாரிகளை தடுத்ததோடு தாக்கவும் முயன்றனர்.

மத்திய படை கோரிக்கை
இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு கேரள மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

கேரளா போலீஸ் போதுமே..
அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு தேவை இல்லை. கேரள போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று கூறி இருந்தது.

தமிழக அரசு புது மனு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறி இருப்பதாவது:

தடுக்க கூடாது
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தடுக்கக் கூடாது என்று கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்
சோதனை என்ற பெயரில் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் புதிய மனுவில் கூறப்பட்டுள்ளது
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications