முல்லைப்பெரியாறு அணை...நீர் வரத்து அதிகரிப்பு... வெள்ளப்பெருக்கு ஆபத்து!!
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து இருப்பதால், அணையின் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. விநாடிக்கு 17,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். தற்போது அணையில் 130.5 அடி நீர் உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 123.2 அடி அதிகரித்துள்ளது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருக்கும் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு நேற்று முதல் 1650 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 142 அடிக்கு நீர் வந்த பின்னர் திறந்தால் ஆபத்து என்பதால் அதற்கு முன்னதாக சிறிது சிறிதாக நீர் திறந்து விடப்படுகிறது. நீர் நிரம்பிய பின்னர் திறந்தால் பெரிய அளவில் சேதாரம் ஏற்படலாம் என்பதால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் இதேபோல் கன மழை பெய்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால், திடீரென அணை திறக்கப்பட்டது. பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டு அந்த அணையும் திறந்து விடப்பட்டதால், பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு வந்து விட்டால் திறந்து விட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இல்லையென்றால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அணைக்கு நீர் வரத்து 136 அடியை தொட்டவுடன் அணையை திறப்பது குறித்து இடுக்கி கலெக்டர் தேனி கலெக்டருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்

முல்லைபெரியாறு அணை தற்போது மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரும்போது பெரியாறு ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் வேறு பகுதிக்கு மாற்றப்படுவார்கள். அந்த வகையில் தற்போதும் எச்சரிக்கை விடப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக, கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இருக்கும் இடம் கேரளாவுக்கு உரிமையானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது. ஆங்கிலேயர்களால் 1895 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு உயரம் 155 அடி ஆகும். முன்பு 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்தது. அணைக்கு ஆபத்து என்பதால் அணையில் முன்பு 136 அடி நீர் மட்டுமே தேக்கப்பட்டு வந்தது. தற்போது, 142 அடியாக இருப்பு வைக்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications