8 வாட்ச்மேன்... ஒரு மணி நேர டைம்.. 11 கடைகளில் ஆட்டையைப் போட்ட திருடன்...!

இவனது திருட்டு முயற்சிகளை யாருமே காண முடியாமல் போனது ஆச்சரியம்தான். அதேசமயம், சிசிடிவியில் இவன் தெள்ளத் தெளிவாக பதிவாகி விட்டதால், சீக்கிரமே இவனைப் பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளது மும்பை போலீஸ்.
கட்கோபர் குதியில் செவ்வாய்க்கிழமை இரவுதான் இந்த தொடர் திருட்டு நடந்தது. அங்குள்ள கனரா விற்பனை மையத்தின் 11 கடைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்து திருடியுள்ளான் இந்த அடையாளம் தெரியாத நபர்.
மொத்தம் ஒரு மணி நேரம் இவன் பல்வேறு கடைகளுக்குள் வாசம் புரிந்துள்ளான். 8 வாட்ச்மேன்களை ஏமாற்றியுள்ளான்.
எந்தவிதமான பதட்டமோ, டென்ஷனோ, கவலையோ இல்லாமல் படு நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் பணத்தையும், பொருட்களையும் இவன் திருடியுள்ளான்.
சில கடைகளில் இரும்பு கிரில் கேட்டுகள் போடப்பட்டிருந்தன. அதையும் கூட இவன் லாவகமாக உடைத்து உள்ளே புகுந்துள்ளான். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸில் வழக்குப் பதிவாகியுள்ளது. சிசிடியிவில் பதிவாகியுள்ள உருவத்தை வைத்து இவனைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
இவனது திருட்டுத்தனத்தால் மொத்தம் ரூ. ஒன்றரை லட்சம் வரை திருடு போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications