மின் கோளாறு.. அந்தரத்தில் நின்ற மோனோ ரயிலால் பரபரப்பு.... 10க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் மோனோ ரயில் சேவையில் இன்று பரபரப்பு ஏற்பட்டு விட்டது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் பாதியிலேயே நின்று போனது. அந்தரத்தி் ரயில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூர் பிளேஸ் ஸ்டேஷன் - பக்தி பார்க் இடையிலான வழியில் இந்த ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டு.மக்களை பயமுறுத்தி விட்டது. சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளிலிருந்து 10க்கும் மேற்பட் பயணிகள் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை. 20க்கும் குறைவான பயணிகளே இருந்ததாக தெரிகிறது. இந்த திடீர் பிரச்சினையால் பயணிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை.
மும்பையில் மோனோ ரயில் அறிமுகமான பின்னர் நடந்துள்ள முதல் எதிர்பாராத சம்பவம் இது ஆகும்.












Click it and Unblock the Notifications