வறட்சியால் வாடியிருந்த மும்பையில் கொட்டியது மழை.. 2 நாளில் பருவமழை கால் வைக்கிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையில் முன் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு பருமழை பொய்த்துப்போனது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கூட மும்பை மற்றும் புனே ஆகிய இரு நகரங்களிலும் நடத்த முடியாமல் போகும் அளவுக்கு வறட்சி அங்கு தலை விரித்து ஆடியது.

இந்நிலையில், மும்பை மக்கள் நேற்று மாலை முதல் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நேற்று மாலையில் லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது முன் பருவமழை என்று கூறுகிறது வானிலை இலாகா.

தென் மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதிவாக்கில் கேரளாவில் கால் வைப்பது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரு வாரம் தாமதமாகவே கேரளாவில் தென் மேற்கு பருவமழை கால் வைத்தது. இதனால் மும்பைக்கு அந்த மழை வந்து சேர மேலும் இரு நாட்கள் ஆகும் என்கிறது வானிலை இலாகா.

கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மும்பையில் மழை காலம் தொடங்கியதாம். இம்முறையும், நாளை அல்லது நாளை மறுநாள் பருவமழை மும்பையில் கால்பதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாண்டு பருமழை கடந்த ஆண்டை ஒப்பிட்டால் அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மழை பெய்துவருவதை மகிழ்ச்சியோடு டிவிட்டர் போன்ற சமூக தளங்களில் பதிவிட்டுவருகிறார்கள் மும்பைகர்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+