பிப்ரவரி 2ம் தேதிக்குள் மும்பை ஏர்போர்ட் வெடித்துச் சிதறும்: செல்போன் மூலம் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிப்ரவரி மாதம் 2ம் தேதிக்குள் மும்பை விமான நிலையம் வெடித்துச் சிதறும் என்று சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு யாரோ போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே ஆகியோரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Mumbai's Chhatrapati Shivaji International Airport before February 2

இந்நிலையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். எடுத்துப் பேசியபோது வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதிக்குள் விமான நிலையம் வெடித்துச் சிதறும் என்று இந்தியில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் விசாரணை பற்றிய எந்த விவரத்தையும் வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை டிசிபி விரேந்திர மிஷ்ரா உறுதி செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+