மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் தண்டனை விவரம்... மீண்டும் ஒத்திவைப்பு
மும்பை : 2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் 12 பேரை குற்றவாளிகளாக மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.

அவர்களுக்கான தண்டனை விபரங்கள் கடந்த 14-ந் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில் நீதிபதி யாதின் டி ஷின்டே தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பான விசாரணை நடைபெற்றபோது குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தூக்கு தண்டனை அளிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தண்டனை விவரங்களை அளிப்பதை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஷின்டே ஒத்திவைத்தார்.
இவர்களது தண்டனை விபரம் குறித்த அறிவிப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications