ஜனாதிபதி பதவிக்கு முரளி மனோகர் ஜோஷி மும்முர 'லாபி'... ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சந்திப்பு!
டெல்லி: நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தீவிரமாக முயற்சித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் உள்ளிட்டோர் முழுவதுமாக ஓரம்கட்டப்பட்டனர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் வசம் பாஜக போனது.

அப்போது 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி முழுவதுமாக ஒதுக்கிவைப்பட்டனர். மத்திய அரசை வெளிப்படையாக பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழிநடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் முதல் கட்டமாக நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்கள் மற்றும் தமிழக சட்டசபையில் 133 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்து வருகிறது.
அதே நேரத்தில் ஓரம்கட்டப்பட்ட முரளி மனோகர் ஜோஷியும் தீவிர லாபியில் இறங்கியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரதம மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட மூத்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை முரளி மனோகர் ஜோஷி சந்தித்து பேசியிருக்கிறார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் நேரில் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்தர ஸ்வரூப், முரளி மனோகர் ஜோஷிக்கு வெளிப்படையாகவே ஆதரவை தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான தீனதயாள் உபாத்யாவின் கொள்கை பரம்பரையில் வந்தவர் முரளி மனோகர் ஜோஷி எனவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரையே ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றே பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜக இதில் தீவிரம் காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications