முஸ்லிம்களின் தொப்பியை மோடி அணியாதது தவறு இல்லையே.: மதகுரு மெக்மூத் மதானி
டெல்லி: முஸ்லிம்கள் மத நிகழ்வுகளின் போது அணியும் பாரம்பரிய தொப்பியை அணியாததற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கத்தேவையில்லை என்று முஸ்லிம் மத குருக்களில் ஒருவரான மவுலானா மெக்மூத் மதானி கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்கள் வழங்கிய பாரம்பரிய தொப்பியை நரேந்திர மோடி அணிந்து கொள்ள மறுத்தார். இதனை ல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தன. இப்போது தேர்தல் காலம் என்பதால் அந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மெக்மூத் மதானி கூறியதாவது:
என்னை ஹிந்துக்களைப் போல நெற்றியில் திலகத்தை அணிய கூறினால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதனால் என்னை ஒரு மோசமான நபர் என்று நீங்கள் சித்தரிக்க முடியாது.
என் நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் நான் மோசமானவானாக இருக்க முடியும். முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணிய மறுத்ததில் எந்த தவறும் இருப்பதாக நான் கண்டுபிடிக்கவில்லை. முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்து கொள்வதாக காட்டிக் கொள்கிறவர்கள் அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் அர்த்தம்.
இன்னும் சொல்லப் போனால் நரேந்திர மோடி, முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணியக் கூடாது. அதே நேரத்தில் குஜராத் வன்முறை தொடர்பில் மோடி மீது தவறிருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இவ்வாறு மெக்மூத் மதானி கூறினார்.












Click it and Unblock the Notifications