அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு.. உ.பி.யில் பேனர் வைத்த முஸ்லிம் அமைப்புகள்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர் வைத்துள்ள நபர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தேர்தலின் போதே உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.

சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என முதல்வர் ஆதித்ய யோகி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும் பாபர் மசூதி - ராமர்கோயில் பிரச்சனையை நீதிமன்றத்து வெளியே சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என ஆலோசனைன வழங்கியது.
இந்நிலையில் லக்னோவில் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், பிரச்சனையை பேசி தீர்த்தக்கொள்ளலாம் என்று அறிவித்தப் பிறகே இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பேனர் வைத்தத நபர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பேனர் வைத்துள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications