அப்பா, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: கெஜ்ரிவால் மகள் உறுதி
டெல்லி: டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தனது அப்பா கெஜ்ரிவால் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவார் என அவரது மகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகள் ஹர்சிதா, மகன் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணம் மேர்கொண்டார். அவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் மற்ற மந்திரிகளின் குடும்பத் தினர்களும் அந்த ரயிலில் சென்றார்கள்.

இந்நிலையில் தனது தந்தை டெல்லி மாநில முதல்வர் ஆனது குறித்து அவரது மகள் ஹர்சிதா கூறியதாவது :-
எனக்கு இது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இது அப்பாவின் முதல்படி. அடுத்து அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியது உள்ளது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். லஞ்சம் இல்லாத இந்தியா உருவாகும்' என்றார்.
கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால் பட்டதாரியான இவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். தாய் கீதாதேவி. இவரும் பட்டதாரிகளாவர். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இவரும் இந்திய வருவாய்த்துறையில் (ஐ.ஆர்.எஸ்) பணிபுரிந்து வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு ஹர்சிதா என்ற மகள் தவிர புல்கித் என்ற ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications