எனது மகள் கைதுக்கு அமெரிக்கர்களின் இனவெறியே காரணம்.... தேவ்யானி தந்தை புகார்
Subscribe to Oneindia Tamil

தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்கரடே, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவைச் சந்தித்து தனது மகள் விவகாரம் குறித்துப் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், எனது மகளை இனவெறியுடன் நடத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். இனவெறியுடன் நடந்துள்ள செயல் இது. இதற்காக அமெரிக்க காவல்துறையும், அரசும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனது மகளின் பெயரைக் கெடுக்கும் வகையிலும், இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமெரிக்கர்கள் நடந்து கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய சதிச் செயல்.
இனவெறிச் செயல் இது என்பதில் சந்தேகமே இல்லை. மிக மிகத் தெளிவாக இது அனைவருக்கும் புரியும். இந்தியர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கை இது.
இந்திய அரசு இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிக மிக கடுமையாக இதை அணுக வேண்டும் என்றார் அவர் கோபமாக












Click it and Unblock the Notifications