'ஹேர்' பிரச்சனையால் தலையை பிய்த்துக் கொள்ளும் டெல்லி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மர்மமான முறையில் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுவது தொடர்வது போலீசாருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வீட்டில் உள்ள பெண்களின் தலைமுடியை யாரோ மர்மமான முறையில் நறுக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தலைமுடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முடி

முடி

தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் வீட்டில் இருந்த 4 பெண்களின் தலைமுடி மர்மமான முறையில் நறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 49 வயது பெண் ஒருவரின் தலைமுடி மர்ம நபரால் நறுக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

போலீஸ்

ஏட்டைய்யா எங்க தலைமுடியை யாரோ நறுக்கிட்டாங்க, அவனை விடாதீங்க என்று பெண்கள் கவலையுடன் தெரிவிப்பது போலீசாரை கலக்கம் அடைய செய்துள்ளது.

தெரியவில்லை

தெரியவில்லை

கதவை பூட்டிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுகிறது. அதை அவர்களே நறுக்கவும் இல்லை. யாரும் கதவை உடைத்துக் கொண்டு வரவும் இல்லை என்பதால் போலீசார் குழம்புகிறார்கள்.

நிபுணர்கள்

நிபுணர்கள்

தலைமுடி பிரச்சனை தொடர்பாக மனநல நிபுணர்களின் உதவியை நாடியுள்ளனர் போலீசார். இந்த வழக்கில் இதுவரை போலீசாருக்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+