நாகாலாந்து மலைக்குள் கொட்டி கிடக்கிறது தங்கம்- ஆய்வில் கண்டுபிடிப்பு
பெங்களூர்: நாகாலாந்து மாநிலத்தின் மலைப்பகுதியில் தங்கம் அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரபல புவியியல் வல்லுநர் நரேஷ் கோஷ் தெரிவித்துள்ளார்.
பாட்னா பல்கலைக்கழகத்தின், ஓய்வு பெற்ற புவியியல் பேராசிரியரான நரேஷ் கோஷ், நடப்பு அறிவியல் என்ற புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாகாலாந்து மாநிலத்தின் மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் அடியில் தங்கம் அதிக அளவு தேக்கமடைந்துள்ளதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய துணைக் கண்டமும், ஐரோப்பிய துணைக் கண்டமும் பழங்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதின. அப்போது எழுந்த மலைதான் நாகாலாந்தில் உள்ளது.
இதுபோன்ற மலைப்பாறைகளுக்குள் தங்கம் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே இந்த மலையில் இருந்து 1,200 பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளை எனது மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். இந்த ஆய்வை நடத்த பெங்களூரிலுள்ள தேசிய புவியியல் அளவை துறையில் வசதியுள்ளது.
அதன் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், இயற்கை தங்கம் மற்றும் வெள்ளி-தங்கம் இணைந்த கலவை கண்டுபிடிக்கப்பட்டது.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மலைப்பகுதியின் மையத்தில்தான் அதிக அளவுக்கு தங்க கனமம் கொட்டிக்கிடப்பது பாறை மாதிரிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications