புதிய மாநிலத்துக்கு 'சோனியா தெலுங்கானா' பெயர் சூட்ட வேண்டுமாம்'
ஆந்திர மாநில காங்கிரஸ் (ஐ) கட்சித் தலைவராக இருக்கிறார் சங்கர் ராவ். இவர் முன்னாள் மாநில அமைச்சர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டி வருகிறார்.
இதனால் தெலுங்கானா தனி மாநிலத்துக்கு 'சோனியா தெலுங்கானா' என பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா மாநிலம் வேண்டும் என கேட்டு பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்குப் பின்னர் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. எனவே இதற்கு காரணமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை தெலுங்கானா மாநிலத்திற்கு வைக்க வேண்டும்.
தெலுங்கானா தாயாக பிரகடனம்
'சோனியா தெலுங்கானா' என பெயர் சூட்ட வேண்டும். அத்துடன் மாநிலத்தின் தாயாக, 'தெலுங்கானா தல்லி'யாக, சோனியாவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராவ் கூறியிருக்கிறார்.